மருத்துவம், சுகாதார துறை அதிகாரிகளுடன் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை

x

மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், மருத்துவ சாதனங்களை முறைப்படுத்தப்படுத்துவது குறித்த உயர்மட்ட ஆய்வு கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பங்கேற்றார்.

மருந்துகளை உற்பத்திசெய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஜே. பி. நட்டா, மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ தனது நடவடிக்கைகளின் மூலம் உலகத் தரத்தை அடைய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும்,

மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பான பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்கு தொழில்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியம் என்றும் அவர்

கூறினார். இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் அபூர்வா சந்திரா, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்