எல்லையில் 4 இந்திய ராணுவ வீரர்கள் உயிரை பறித்த காஷ்மீர் டைகர்ஸ் கேங்.. குலைநடுங்கவிட்ட 20 நிமிடங்கள்

x

ஜம்மு-காஷ்மீர் தோடாவில், தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ராணுவ அதிகாரி உட்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர். ராஷ்ட்ரிய ரைபிள் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு போலீஸ் குழுவினர் இணைந்து தோடா வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் சுமார் 20 நிமிடங்கள் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் காயமடைந்த ராணுவ அதிகாரி உட்பட 4 வீரர்கள், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய காஷ்மீர் டைகர்ஸ் என்ற தீவிரவாத இயக்கம் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்