நாடே எதிர்பார்த்த தேர்தல்.. பாஜகவுக்கு அடி?.. வெளியான கருத்துக்கணிப்பு

x

அரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரே கட்டமாக 90 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 61.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி கருத்துக்கணிப்புகள் வெளியாகின. கருத்துக்கணிப்பு முடிவுகள் மாநிலத்தில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை தட்டிப்பறிக்கிறது என தெரிவிக்கின்றன. இந்தியா டுடே - சி ஓட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் மாநிலத்தில் பாஜக 20 முதல் 28 சீட்களை பிடிக்கலாம் என்றும் காங்கிரஸ் 50 முதல் 58 சீட்கள் வரையில் பிடிக்கலாம் என்றும் ஆம் ஆத்மி ஒரு சீட்டில் கூட வெற்றிப்பெற வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பிற கட்சிகள் சுயேட்சைகள் 10 முதல் 14 சீட்கள் வரையில் வெற்றிப்பெறலாம் எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியமைப்போம் என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்