இந்தியா கூட்டணிக்கு வெற்றி... ஆட்டம் கண்ட பாஜக உஷார்.! | INDIA Alliance | BJP | PM Modi

x

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியாக இருக்கும் மகாராஷ்டிராவில், அரசியல் கட்சிகள், பிரசாரங்களில் தீவிரம் காட்டி வருகின்றன. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும் தொகுதி பங்கீடு தொடர்பாக மாரத்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளை இந்தியா கூட்டணி அள்ளிய நிலையில் பா.ஜ.க. பின்னடைவை சந்தித்தது. இப்போது தேர்தலில் வெற்றியை வசமாக்க வியூகம் போடும் பா.ஜ.க. - சிவசேனா ஷிண்டே அணி - தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணி இணைந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் பா.ஜ.க. 150 முதல் 155 இடங்களிலும், சிவசேனா ஷிண்டே அணி 90 முதல் 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணி 40 முதல் 45 இடங்களிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்