உலகையே அதிரவைத்த `ஜூன் 2023' சம்பவம் - கனடாவில் இந்தியாவுக்கு எதிராக வெடித்த போராட்டம்

x

உலகையே அதிரவைத்த `ஜூன் 2023' சம்பவம் - கனடாவில் இந்தியாவுக்கு எதிராக வெடித்த போராட்டம்

கனடாவில் உள்ள இந்திய துணை தூதரகங்களை மூட வேண்டும் என அந்நாட்டில் வசிக்கும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது...

கனடாவின் டொரன்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு வெளியே சீக்கியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "கனடாவின் இறையாண்மை, பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றிற்கு இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டினர்... கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அதில் இந்தியாவிற்கு தொடர்புள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால் இந்தியா அதை மறுத்தது. இவ்விவகாரத்துடன் தொடர்புள்ளதாக 6 தூதரக அதிகாரிகள் கனடாவை விட்டு வெளியேற்றப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது... இந்நிலையில், கனடாவில் உள்ள இந்திய துணை தூதரகங்களை மூடக் கோரி சீக்கியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்