NH-ல் கிடந்த ஐஇடி bomb ... பெரும் ஆபத்து தவிர்ப்பு | jammu kashmir

x

காஷ்மீரில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த 2 கிலோ ஐஇடி வெடிபொருளை பாதுகாப்புத்துறையினர் அகற்றினர். கிஷ்த்வார் மாவட்டத்தில் காவல் துறையும், ராணுவமும் கூட்டு சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிஷ்த்வார்-படோட் தேசிய நெடுஞ்சாலை ஓரம் ம‌ர்ம பொருள் இருந்த‌தை கண்டுபிடித்தனர். அதனை சோதனை செய்த போது 2 கிலோ ஐஇடி வெடிபொருள் இருந்த‌து தெரிய வந்த‌து. இதையடுத்து வெடிகுண்டு வல்லுநர்களை வரவழைத்து, பாதுகாப்பாக செயலிழக்க வைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்புடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்