ஓசூரில் சடலமாக கிடந்த மருமகன்... கூலிப்படையை ஏவி மகள் தாலி அறுத்த தந்தை... வெளியான கொடூர பின்னணி

x

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கொண்ட்வார்பள்ளி கிராமத்தை சேர்ந்த கலூரி அசானய்யா என்பவர் பிராம்பி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து உள்ளார். அவர்களுக்கு பர்ஹானா என்று 3 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஓசூர் காமராஜ் நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் கலூரி அசானய்யா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். உடலை கைப்பற்றி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை ஆந்திராவில் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கலூரி அசானய்யாவை அவரது மாமனார் காதர் வலி கூலிப்படையை ஏவி கொன்றது தெரிய வந்தது. மேலும் காதல் திருமணம் செய்த மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்ய காதர் வலி திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கொலையில் தொடர்புடைய 8 பேரை ஓசூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்