சினிமா வட்டத்தை உலுக்கிய பாலியல் பிரளயம் - ஐகோர்ட் போட்ட பரபரப்பு உத்தரவு

x

ஹேமா கமிட்டியில் புகார்தாரர்கள் கூறிய தகவல்களை வெளியிடக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.கேரள திரைத்துறையில் பெண் கலைஞர்கள் பாதிக்கப்படுவது குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்த சூழலில், விசாரணையின் முன்னேற்றத்தை அறியும் நோக்கில் செயல்படும் ஊடகங்களுக்கு சிறப்பு விசாரணை குழு எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும், எச்சரிக்கையை மீறி விசாரணைக்கு உட்பட்டவர்களை தொடர்பு கொண்டால் ஆதாரங்களுடன் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஹேமா கமிட்டியிடம் புகார்தாரர் கூறிய தகவல்களை வெளியிடக்கூடாது எனவும், இத்தகைய தகவல்கள் நீதிக்கு இடையூறாகக் கருதப்படலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த உத்தரவுகளுக்கு எதிராக செய்திகள் வெளியானால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்