ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து - 3 பேர் பலி | helicopter | Maharashtra | ThanthiTV

x

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாவ்தான் என்ற இடத்தில், இன்று காலை ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. புனேவில் உள்ள ஆக்ஸ்போர்ட் கோல்ப் கிளப் ஹெலிபேட் மைதானத்தில் இருந்து புறப்பட்ட சற்று நேரத்திலேயே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. விபத்து நிகழ்ந்த பகுதியில் நிலவிய அடர்த்தியான பனி மற்றும் புகைமூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், 3 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்