குருவாயூர் கோயிலில் புதிய மாற்றம்.. அக்.1 முதல்..

x

கேரள மாநில முக்கிய கோயில்களில் ஒன்றான குருவாயூர் கோயிலில், புதிய மேல் சாந்தியாக வல்லாரக்காடு சோமநல்லூர் புதுமனை ஸ்ரீஜித் நம்பூதிரி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 36 வயது இளைஞரான இவர் முதல் முறையாக மேல் சாந்தியாக தேர்வாகியுள்ளார். 56 பேர் விண்ணப்பித்த நிலையில், தகுதியான 42 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களது பெயர்கள் துண்டு சீட்டில் எழுதப்பட்டு, தற்போதைய மேல் சாந்தியான மதுசூதனன் நம்பூதிரியால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார். இவர் அக்டோபர் ஒன்று முதல் ஆறு மாதங்கள் இப்பதவியில் செயல்படுவார்.


Next Story

மேலும் செய்திகள்