மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் கஞ்சா பேய்களின் கொலைவெறி ஆட்டம்.. தெலங்கானாவில் அதிர்ச்சி

x

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கொத்தப்பேட்டையை சேர்ந்த ஜனார்த்தன் என்பவரின் வீட்டு முன்பு இரவு நேரத்தில் ஒரு கும்பல் கஞ்சா புகைத்து கொண்டிருந்தனர். குடியிருப்பு பகுதியில் இது போல் செய்யக் கூடாது என்று கூறி அவர்களை அங்கிருந்து

செல்லுமாறு ஜனார்தனர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பல் ஜனார்த்தனனை கட்டைகள், கற்கள் ஆகியவற்றால் தாக்கி

விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. தாக்குதலில் காயமடைந்த ஜனார்த்தனை குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் சேர்த்த பின், போலீசில் புகார் அளித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கு வன்முறை தொடர்பான காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கஞ்சா கும்பலை சேர்ந்த இளைஞர்களை

தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்