"இது ஒரு படிப்பினை" - ரிசல்ட்டுக்கு பின் கண்கலங்கிய ஈபிஎஸ்

x

மக்களவை தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வினரை சோர்வடைய செய்யாது என்று அக்கட்சி பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்

தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வுக்கு எதிராக நடந்த சூழ்ச்சிகளையும், சூதுகளையும் முறியடிக்கவே தனிக் கூட்டணி அமைத்தது அ.தி.மு.க. என்றும் இந்த தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வினரை சோர்வடைய செய்யாது என்றும் குறிப்பிட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும் படிப்பினையும் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மக்களவை தேர்தலின் போது அயராது உழைத்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும்

தொண்டர்களின் உழைப்புக்கும் தியாகத்திற்கும் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என கண் கலங்குவதாகவும் அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்