முன்னாள் பாஜக பிரமுகர் கொண்டாடிய தசரா விழா துப்பாக்கியுடன் பங்கேற்ற இளைஞர்கள்-குவாலியரில் பரபரப்பு

x

முன்னாள் பாஜக பிரமுகர் கொண்டாடிய தசரா விழா துப்பாக்கியுடன் பங்கேற்ற இளைஞர்கள்-குவாலியரில் பரபரப்பு

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட ப்ரீத்தம் லோதியின் ஆதரவாளர்கள் துப்பாக்கிகளுடன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவராக இருந்த ப்ரீத்தம் லோதியின் சார்பில், குவாலியரில் தசரா கொண்டாட்டம் நடைபெற்றது.

அப்போது, அவரது ஆதரவாளர்கள், துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய பிரீத்தம் லோதி, இளைஞர்கள் துப்பாக்கிகளை ஏந்த வேண்டும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, துப்பாக்கிகளுடன் பங்கேற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்