கையில் துப்பாக்கியோடு பார்க்கில் மோதல்... குண்டு பாய்ந்த நொடி துடித்து நின்ற உயிர்

x

கையில் துப்பாக்கியோடு பார்க்கில் மோதல்... குண்டு பாய்ந்த நொடி துடித்து நின்ற உயிர்

டெல்லியில் இரு தரப்பினர் துப்பாக்கியால் சுட்டு கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

டெல்லியில் உள்ள ஜஹான்கிர்புரி பகுதியில் பூங்காவில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இருதரப்பினர் மோதி கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு கிடந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றி மோதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்