நெருங்கும் தேர்தல் - நாளை டெல்லி உயர்நீதிமன்றம் - விசாரிக்கும் முக்கிய மனு

x

ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முன்னிலையில், மணீஷ் சிசோடியா தரப்பு முறையிட்டது. மணீஷ் சிசோடியா சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார் என்றும் மக்களவைத் தேர்தல் நடப்பதால் அவரது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். இதை ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம் சிசோடியாவின் ஜாமின் மேல் முறையீடு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே, மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. மறுஆய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்