வெளியே வந்த கெஜ்ரிவால்... ஆம் ஆத்மி செய்த மாஸ் சம்பவம்... திரும்பிய மொத்த டெல்லியின் கவனம்

x

டெல்லியில் வரும் 25-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய 3 கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரித்து, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இளைஞர்கள் சைக்கிள் பேரணி நடத்தினர். ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் இருந்து இந்தியா கேட் வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது. அப்பொழுது சர்வாதிகாரத்தை அகற்றி நாட்டை காப்பாற்றுவோம் என்ற முழக்கத்தோடும், பதாகைகளுடனும் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்