சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..தொடர்ந்து 5 முறை குலுங்கிய பூமி- அதிர்ந்த டெல்லி

x

சீனா - கிர்கிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. சீனாவின் தெற்கு ஜின்ஜியாங்க் பகுதி மற்றும் கிர்கிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டிய பகுதியில், ரிக்டர் அளவில் 7.2 அலகுகளாக.. நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இரவு 11.39 மணியளவில், 80 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, 5 முறைக்கும் மேல் 5.0 என்ற ரிக்டர் அளவில் அடுத்த‌டுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, இந்தியாவில் தலைநகர் டெல்லி உள்ளி வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்