அந்த வழக்கறிஞர்களாலும் முடியும் - உச்சநீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

x

உச்சநீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் சரா சன்னிக்கு உதவிடும் வகையில் சைகை மொழிபெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சரா சன்னி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சைகை மொழிபெயர்ப்பாளரை நியமிக்க உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டது. அந்த வகையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சைகை மொழிபெயர்ப்பாளர் இன்று ஆஜரானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, சரா சன்னி தனது சொந்த செலவில் சைகை மொழிபெயர்ப்பாளருடன் ஆஜராகி வாதிட்டார். அரசியல் சாசன அமர்வு முன் நடைபெறும் விசாரணையை மாற்றுத்திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில் சைகை மொழிபெயர்ப்பாளர் நியமிக்கப்படுவார்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்