பயங்கரவாதிகள் தாக்குதல்.. 2 ராணுவ வீரர்கள் பலி

x

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியாகினர். அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். கோகர்நாக் பகுதியில் உள்ள அஹ்லான் ககர்மண்டு வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்