காவிரியில் திடீர் வெள்ளம்.. போக்குவரத்து நிறுத்தம்.. எச்சரிக்கை

x

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து இன்று காலை ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கலுக்கான நீர்வரத்து 2.10 லட்சம் கனஅடியாக அதிகரித்து, வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே, அஞ்செட்டி வழியாக ஒசூர் செல்லும் சாலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது நீர்வரத்தானது ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்