கார் விபத்தில் உயிர் காக்கும் ஏர் பேக்காலேயே குழந்தை மரணம்

x

கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்தது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள படப்பரப்பு பகுதியில், காரும் டேங்கர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது காரின் முன் பகுதியில் இருந்த பெண்ணின் மடியில், அவரது 2 வயது குழந்தை அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏர் பேக் விரிந்து குழந்தையின் முகத்தில் அழுத்தியதாலும், சீட்பெல்ட் இறுக்கியதாலும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதியினர் காரில் இருந்து மீட்ட நிலையில், குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்