"வர முடியாது..." - ஆட்டிப்படைக்கும் ED கண்ணில் விரலை விட்டு ஆட்டும் கெஜ்ரிவால்

x

"வர முடியாது..." - ஆட்டிப்படைக்கும் ED கண்ணில் விரலை விட்டு ஆட்டும் கெஜ்ரிவால்

#ED #EnforcementDirectorate #Kejriwal #Delhi

அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராக மாட்டார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

vovt

டெல்லி குடிநீர் வாரியம் ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராக மாட்டார் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ள நிலையில், அமலாக்கத்துறை மீண்டும் மீண்டும் ஏன் சம்மன் அனுப்புகிறது எனவும் அமலாக்கத் துறையின் சம்மன் சட்டவிரோதமானது எனவும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்