ஓட்டுநர் இல்லாமல் திடீரென உருண்டு வந்த பஸ்! ஊழியர் மீது மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

x

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோயில், ஓட்டுநர் இல்லாமல் இயங்கிய பேருந்து, பெட்ரோல் பங்க் ஊழியர் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காந்தா கர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த பேருந்து ஒன்று, திடீரென ஓட்டுநர் இல்லாமல், தானாக இயங்கியுள்ளது. அப்போது, அங்கு பணியில் இருந்த ஊழியர் மீது பேருந்து மோதியதுடன், நடைபாதையில் நின்ற மற்றோரு பேருந்து மீதும் மோதி நின்றது. விசாரணையில், சரிவான பகுதியில் பேருந்து நின்றதால் விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. படுகாயமடைந்த ஊழியர், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்