தாண்டி விடலாம் என நினைத்தவருக்கு கண்மூடி திறப்பதற்குள் பயங்கரம்

x

கேரள மாநிலம் மண்ணார்காடு பகுதியில் சாலையை கடக்க முயன்றவர் மீது பைக் மோதும் காட்சிகள் வைரலாகி உள்ளது. பாலக்காட்டிலிருந்து கோழிக்கோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நோட்டமலை என்ற இடத்தில் ஒருவர் சாலையின் குறுக்கே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். காயமடைந்த அவர் மன்னார்க்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்