80க்கு மேற்ப்பட்ட பழங்குடியினரின் வீடுகளுக்குத் தீ வைத்த பயங்கரம்..

x

பீகார் மாநிலம் பழங்குடியினர் வசிக்கும் 80க்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவாடா பகுதியில் உள்ள மஞ்சி தோலாவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. நிலத்தகராறு காரணமாக மர்ம கும்பல் வீடுகளுக்குத் தீ வைத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் நிகழாத நிலையில், சில விலங்குகள் பலியாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு ஏடிஜி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்