நீரில் மூழ்கி 43 பேர் பலி - பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

x

பீகாரில் 'ஜிவித்புத்ரிகா' திருவிழாவின்போது மாநிலத்தின் 15 மாவட்டங்களில் இந்த சம்பவங்கள்

நடந்தன. 'ஜிவித்புத்ரிகா' பண்டிகையின்போது, ​​பெண்கள்

தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருந்து, பல்வேறு

நீர்நிலைகளில் புனித நீராடினர். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதில் 37 குழந்தைகள் உள்பட 43 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 43 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்