சட்டப்பேரவை தேர்தல் - இலவச திட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்படும் இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்தக் கோரிய வழக்கில், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பத்துலால் ஜெயின் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குகளைப் பெறுவதற்காக, மக்களின் வரிப்பணத்தை கொண்டு கவர்ச்சிகரமான இலவச திட்ட அறிவிப்புகளை மாநில அரசுகள் அறிவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற திட்டங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இதுகுறித்து பதிலளிக்க மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, இதே விவகாரம் தொடர்புடைய மனுவுடன் இந்த மனுவையும் இணைத்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்