மீண்டும் மீண்டும் கோர்ட் கதவை தட்டிய கெஜ்ரிவால்.. இறுதி ஆட்டம் ஆரம்பம்.. இன்று எழுதப்படும் தீர்ப்பு

x

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையின் கைதை எதிர்த்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று கூறுகிறது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்தது.

அமலாக்கத் துறையின் கைது எதிர்த்த டெல்லி முதல்வரின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில்,

அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்ட விரோதம் என்று அறிவிக்கக்கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்