திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு இன்று காத்திருக்கும் அதிர்ச்சி?

x

திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு இன்று காத்திருக்கும் அதிர்ச்சி?

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை சிபிஐ இன்று கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில், முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 20- ஆம் தேதி வழங்கிய ஜாமினுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இதனிடையே, டெல்லி திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்த‌தாகவும், இன்று விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் அனுமதியை பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு கெஜ்ரிவாலை கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்