மீண்டும் அழைத்த திகார்... சிறைக்கு செல்லும் முன் கெஜ்ரிவால் சொன்ன உருக்கமான வார்த்தைகள்

x

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது இடைக்கால பிணை முடிந்து திகார் சிறைக்குச் செல்கிறார்...இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள கெஜ்ரிவால் 21 நாள்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்ததாகவும், உச்ச நீதிமன்றத்திற்கு மிக்க நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்... மேலும் மதியம் 3 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி திகார் சென்று சரணடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்... முதலில் ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அங்கிருந்து கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோவிலுக்கு சென்று வழிபட உள்ளதாகவும், அதன்பிறகு ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்குச் சென்று அனைத்துத் தொண்டர்களையும் கட்சித் தலைவர்களையும் சந்தித்து விட்டு புறப்பட உள்ளதாகத் தெரிவித்தார்... சிறையில் இருந்து அனைவரையும் நினைத்து தான் கவலைப் படுவதாகத் தெரிவித்த அவர், நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் கெஜ்ரிவாலும் சிறையில் மகிழ்ச்சியாக இருப்பார் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்