சூரல்மலைக்கே ஹீரோவான பெய்லி பாலம்... மேலும் பலம் சேர்க்கும் ராணுவம்

x

கேரள மாநிலம் சூரல்மலைப்பகுதியில் பெய்லி பாலத்தின் அருகே மண் சரிவு ஏற்படாமல் இருக்க, தன்னார்வ மீட்புப் படையினர் கற்களைக் கொண்டு தடுப்பு அமைத்தனர். வயநாடு மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, ராணுவத்தினர் பெய்லி பாலத்தை அ மைத்தனர். இந்த பாலத்தின் அருகே தண்ணீர் வேகமாக வருவதால், அதனை பாதுகாக்க முடிவு செய்த ராணுவத்தினர், பாலத்தின் கரைகளில் கற்களைக் கொண்டு தடுப்பு அமைக்க முடிவு செய்தனர். அதன்படி, தன்னார்வ மீட்புப் படையினரைக் கொண்டு, கற்களை அடுக்கி, பாலத்தை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்