காக்கி என்றலே பிடிக்கும் வெறி.. பார்த்த நொடியே பிளக்கப்படும் மண்டை - பீதியில் ஆந்திர போலீஸ்

x

காக்கி என்றலே பிடிக்கும் வெறி..

பார்த்த நொடியே பிளக்கப்படும் மண்டை

"என்னடா சோதனை.."பீதியில் ஆந்திர போலீஸ்

ஆந்திராவில் போலீஸ் சீருடையில் யாரையாவது பார்த்தால் விரட்டி விரட்டி அடிக்கும் ஆசாமியால் ஆந்திர காவலர்கள் கதி கலங்கிப் போயுள்ளனர்... இச்சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

"ஜில்லா" படம் பார்த்திருப்போம்... அதில் துவக்கத்தில் விஜய்க்கு காக்கிச்சட்டை என்றாலே கசப்பாக இருக்கும்...

இதே போன்ற ஒரு சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது...

திருப்பதி கூடூரில் உள்ள சாதுபேட்டை சர்க்கிளையே மிரள வைத்துள்ளார் இந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லல்த்து கலிந்திலோ...

இவருக்கு காவலர் உடையில் யாரையாவது கண்டாலே ஆகாதாம்... வெறி பிடித்ததைப் போல் மாறி விடுவாராம்...

திமிரு படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சி ஒன்றிருக்கும்...ஜெயில் வார்டன் என நினைத்து ஹாஸ்டல் வார்டனான வடிவேலுவை வெளுத்தெடுக்கும் ஒரு கும்பல்...

அதைப் போலத்தான் இந்த கலிந்திலோ காக்கிச் சட்டையைக் கண்டாலே காண்டாகி விடுவாராம்... கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து அடிக்கத் துவங்கி விடுவாராம்...

சாதுபேட்டை சர்க்கிள் காவல் நிலையத்தில் பணிபுரியும் தாசுவும் மற்றொரு காவலரும் கடைக்குச் சென்றுள்ளனர்... அங்கு கட்டையோடு காத்திருந்த கலிந்திலோ, காவலரான தாசுவின் மண்டையைக் கட்டையால் பிளந்து விட்டார்...

மயங்கி சரிந்த தாசு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...

கலிந்திலோவைக் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

காவலர் சீருடையில் யாராவது வந்தாலே பாய்ந்து தாக்கும் விசித்திர மனநோய் கலிந்திலோவுக்கு உள்ளதாம்...

உண்மையாகவே கலிந்திலோ மன நோயாளிதானா?... இல்லை எல்லாம் நடிப்பா?... என்பது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தால் தான் வெளிச்சத்துக்கு வரும்...


Next Story

மேலும் செய்திகள்