மனைவியின் போனில் இருந்து உறவினர்களுக்கு கணவன் அனுப்பிய மெசேஜ் - பறிபோன உயிர்.. அதிர்ந்த பெற்றோர்

x

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் பங்காரம்மா பேட்டையை சேர்ந்தவர் ஜெகதீஷ். சி.ஆர்.பி.எஃப் வீரரான இவருக்கு அனுஷா என்பவருடன் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு முன் தன் ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் அனுஷாவிற்கு நெருங்கிய பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த ஜெகதீஷ் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார். இதேபோல் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், முன்னரே திட்டமிட்டு வைத்திருந்த நைலான் கயிற்றால் மனைவியை கழுத்தை இறுக்கி ஜெகதீஷ் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின், அனுஷாவின் செல்போனில் இருந்து... அனுஷா நெருங்கி பழகி வந்த இளைஞரின் பெயரை குறிப்பிட்டு உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பிய ஜெகதீஷ், அந்த இளைஞர் தனக்கு தொல்லை கொடுப்பதாகவும், அதனால் தற்கொலை செய்யப்போவதாகவும் கூறி அனுஷா பேசுவது போல் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். போலீஸ் விசாரணையில் அனைத்தும் அம்பலமான நிலையில், சிஆர்பிஎஃப் வீரர் ஜெகதீஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஜெகதீஷ் அனுப்பிய மெசேஜை நம்பி, அவர் குறிப்பிட்டிருந்த இளைஞரின் வீட்டிற்கு சென்று அனுஷாவின் பெற்றோர் வாக்குவாதம் செய்ததும் குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்