ஆந்திராவில் மழை காட்டிய கோரமுகம்.. தலைகீழாய் மாறிய நிலை - ஸ்தம்பிக்க வைக்கும் காட்சிகள்

x

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள், குட்டைகள் நிரம்பி அவற்றிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெனுகொண்டா அருகே உள்ள ஏரி ஒன்றிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் அந்த பகுதியில் உள்ள சாலை வழியாக பாய்ந்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட வாகனங்களை போலீசார் மீட்டனர். இந்நிலையில், 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்