அண்ணன் இல்லாத நேரத்தில் குடும்பத்தையே கழுத்தறுத்து போட்ட தம்பி - ஆந்திராவை அதிர வைத்த சம்பவம்

x

ஆந்திர மாநிலம் திருப்பதியில், குடும்பத்தகராறில் அண்ணி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு மைத்துனரும் த*கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் அருகே முனி ரெட்டி நகர் காலனியில் இந்தச் சம்பவம் அரங்கேறியது.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் மோகன் என்பவர், தனது அண்ணன் மனைவி சுனிதா மற்றும் குழந்தைகள் தேவிஸ்ரீ, நீரஜா ஆகியோரை இரவில் வீடு புகுந்து கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

சுனிதாவின் கணவர் தாஸ் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் மோகனுக்கு விருப்பமில்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், மனவேதனையில் இருந்த மோகன், அண்ணன் தாஸை பழிவாங்கத் திட்டமிட்டு,

அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீடு புகுந்து அண்ணி மற்றும் குழந்தைகளை கொடூரமாகக் கொன்று, தானும் த*கொலை செய்தது, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்