"மோடியை அகற்றும் வரை நான் சாக மாட்டேன்" - அமித்ஷாவை கொந்தளிக்க வைத்த பேச்சு | PM Modi | Amit Shah

x

காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடி மீது எத்தகைய அச்சமும் வெறுப்பும் கொண்டிருக்கிறார்கள் என்பதையே, மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு அமைந்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் கதுவா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை தான் இறக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமித்ஷா, வெறுப்பாகவும், அவமானமாகரமாகவும் பேசுவதில் தனது தலைவர்களைவிட மல்லிகார்ஜுன கார்கே சிறப்பாக செயல்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். தேவையில்லாமல் தனது தனிப்பட்ட உடல்நல விஷயங்களில் பிரதமர் மோடியை மல்லிகார்ஜுன கார்கே இழுத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அமித் ஷா, கார்கேவின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பிரதமர் மோடியும், தானும் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தார். அவர் நீண்ட ஆரோக்கியமாக வாழ அனைவரும் பிரார்த்திப்பதாகவும், அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்...

2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் உருவாகும் வரை வாழட்டும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்