"இந்த தேதிகளில் ஏர் இந்தியாவில் பயணம் செய்யாதீர்கள்..!" மிரட்டல் கொடுக்கும் காலிஸ்தான்

x

நவம்பர் 1 முதல் 19 வரையில் ஏர் இந்தியா விமானத்தில் தாக்குதல் நடத்தப்படும் என காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் மிரட்டியுள்ளார்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்று 40 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஏர் இந்தியாவில் பயணம் செய்ய வேண்டாம் என மிரட்டியுள்ளார். ஏற்கனவே இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் போலி வெடிகுண்டு மிரட்டல்களால் வான் போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது. குர்பத்வந்த் சிங் பன்னூன் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பை தொடங்கியவர். அமெரிக்காவிலும், கனடாவிலும் இரட்டை குடியுரிமையை பெற்றுள்ளார். தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டின் பேரில் அவரை 2020 ஜூலையில் மத்திய அரசு பயங்கரவாதியாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் இதுபோல் டெல்லி விமான நிலையம், நாடாளுமன்றத்தில் தாக்குதல் எச்சரிக்கையை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்