நடிகை பாலியல் வழக்கு.. - சிக்கிய நடிகர் - உச்சநீதிமன்றம் கெடு

x

கேரளாவில், மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணையை, மேலும் 8 மாதங்களில் முடிக்க உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு, திருச்சூரில் இருந்து கொச்சிக்கு இரவில் காரில் சென்றபோது, ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, ஓட்டுநர் பல்சர் சுனில்குமார் உட்பட 7 பேரும், பிரபல நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டனர். எர்ணாகுளம் தனி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை ஜூலை 31ம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மேலும் அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், 8 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்