5 ஸ்டார் ஹோட்டல் மீட்டிங், மும்பையில் பார்ட்டி என ஸ்கெட்ச்.. மதுரையில் சதுரங்க வேட்டை 2.0

x

மதுரை, தெற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். பர்னிச்சர் கடை நடத்தி வரும் இவரிடம், கலைச்செல்வி என்பவர் தொழில் ரீதியாக அறிமுகமாகி பழகி வந்திருக்கிறார். இதில், இரிடியம் கலந்த கலசத்தில் முதலீடு செய்தால், பல கோடி ரூபாய் லாபம் கிடைக்குமெனக் கூறி சதுரங்க வேட்டை பட பாணியில் தெய்வேந்திரனுக்கு கலைச்செல்வி வலை விரித்ததாக தெரிகிறது. தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகியான முகமது ரபி என்பவரையும் இதுகுறித்து தெய்வேந்திரனிடம் செல்போனில் பேச வைத்து கலைச் செல்வி நம்ப வைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங், மும்பையில் பார்ட்டி என தொடர்ந்து தெய்வேந்திரனை இருவரும் காய் நகர்த்தி வந்துள்ளனர். தொடர்ந்து, புலி தோல், சிறுத்தை நிகம், வைரக்கல் போன்றவற்றை காட்டி ஆசையை தூண்டிய இருவரும், சுமார் 20கோடி மதிப்பிலான இரிடிய கலசம் இருப்பதாக கூறி தெய்வேந்திரனிடம் இருந்து 18 லட்ச ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை தெற்கு வாசல் சரக போலீசாரிடம் தெய்வேந்திரன் புகாரளித்திருக்கும் நிலையில், முகமது ரபி மற்றும் கலைச்செல்வி மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்