காரில் இருந்தவரை துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

டெல்லியில் காரில் சென்றவர்கள் மீது மூன்று பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
டெல்லியில் காரில் சென்றவர்கள் மீது மூன்று பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு டெல்லியில் உள்ள சுபாஷ் நகரில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் இன்னோவா கார் ஒன்று நின்ற போது, மூன்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே காரை முன்னோக்கியும், பின்னோக்கியும் இயக்கி எடுத்துக் கொண்டு ஓட்டுநர் புறப்பட்ட போது, அந்த நபர்கள் மீண்டும் துரத்திச் சென்று சுட்டனர். இதில் காரில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். காரில் இருந்தவர்கள் குறித்தும், துப்பாக்கியால் சுட்டவர்கள் குறித்தும் காவல்துறையினர் தகவல் வெளியிடவில்லை. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்