ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு..17 பேருக்கு தீவிர சிகிச்சை

கேரள மாநிலம் காசர்கோட்டில், ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள ஐடியல் கூல்பார் மற்றும் ஃபுட் பாயின்ட் என்ற கடையில் இருந்து, கடந்த வெள்ளிக்கிழமை சில மாணவர்கள் ஷவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு ஃபுட் பாய்சன் ஆன நிலையில், அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் தேவானந்தா என்ற 16 வயது மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 17 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். இந்நிலையில், உணவு மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்தனர். இது குறித்து போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், உரிமம் இல்லாமல் கடை இயங்கி வந்ததாகவும், சுகாதாரமற்ற முறையில் உணவு சமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்