"நீ வேணும்னா என் மொழில பேசு" - இந்தியில் பேச மிரட்டியவர்களை அலறவிட்ட பெண்

கோவாவில் கன்னட பெண் ஒருவரை இந்தியில் பேசுமாறு வற்புறுத்தும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
கோவாவில் கன்னட பெண் ஒருவரை இந்தியில் பேசுமாறு வற்புறுத்தும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் அஜய் தேவ்கன் மற்றும் கிச்சா சுதீப் இருவரிடையே ட்விட்டரில் மொழிப்போர் நடைபெற்றது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அவர்களது ரசிகர்களிடையே மொழி தொடர்பான கொதி நிலையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோவாவிற்கு சுற்றுலா சென்ற கன்னட பெண்களிடம் ஒரு கும்பல் இந்தியில் பேசுமாறு வற்புறுத்துகின்றனர். அதற்கு அந்த பெண் துணிச்சலாக, நீங்கள் வேண்டுமானால் கன்னடத்தில் பேசுங்கள் என கூற எதிர் தரப்பு இது இந்தியா நீங்கள் இந்தியில் தான் பேசவேண்டும் என கடுமையாக எதிர்க்க ஆரம்பிக்கிறது. இந்த வீடியோ தற்போது, சமூக வலை தளத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்