ஹிஜாப் விவகாரம்; உச்சநீதிமன்றம் புதிய தகவல்

ஹிஜாப் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை 2 நாட்களுக்கு விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
x
ஹிஜாப் விவகாரம்; உச்சநீதிமன்றம் புதிய தகவல்

ஹிஜாப் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை 2 நாட்களுக்கு விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டடன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன் மூத்த வழக்குரைஞர் மீனாக்ஷி அரோரா முறையிட்டார். இதனை பரிசீலித்த தலைமை நீதிபதி 2 நாட்களுக்குள் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்