சில்வர் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் - போராட்டக்காரர்களை தாக்கிய போலீசார்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சில்வர் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சில்வர் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் - போராட்டக்காரர்களை தாக்கிய போலீசார்
x
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சில்வர் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில்வர் லைன் இருப்புப் பாதை திட்டத்திற்காக வருவாய்த்துறையினர் நிலம் அளவிடும் பணியை நிறுத்த வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்த‌தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டக்கார‌ர்களை காவல்துறையினர் அடித்து உதைத்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தை தொடர்ந்து, நிலம் அளவிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்