'சர்ப்ரைஸ்' ஆசைகாட்டி கண்ணை மூட சொல்லி மாப்பிள்ளை கழுத்தை அறுத்த மணப்பெண்

ஆந்திராவில் நிச்சயிக்கப்பட்ட மணமகன் பிடிக்காததால் அவரை தனியே அழைத்துச் சென்ற இளம்பெண் அவரின் கழுத்தை கொடூரமாக அறுத்த சம்பவம்...
x
'சர்ப்ரைஸ்' ஆசைகாட்டி கண்ணை மூட சொல்லி மாப்பிள்ளை கழுத்தை அறுத்த மணப்பெண்

ஆந்திராவில் நிச்சயிக்கப்பட்ட மணமகன் பிடிக்காததால் அவரை தனியே அழைத்துச் சென்ற இளம்பெண் அவரின் கழுத்தை கொடூரமாக அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆந்திர மாநிலம் அனகா பள்ளியை சேர்ந்தவர் புஷ்பா. பிஹெச்டி மாணவியான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதனிடையே பார்ட்டி என கூறி ராமகிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு மலைப்பகுதிக்கு சென்றுள்ளார் புஷ்பா. அப்போது சர்ப்ரைஸ் கிப்ட் தரப்போகிறேன் என கூறி ராமகிருஷ்ணாவின் கண்ணை தன் துப்பட்டாவால் கட்டிய அவர், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்தம் கொட்டிய நிலையில் இருந்த ராமகிருஷ்ணாவை தன் வாகனத்திலேயே ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அப்போது கால் தவறி அவர் விழுந்து விட்டதாக புஷ்பா கூறியதை மருத்துவமனையில் உள்ளவர்கள் நம்பவில்லை. இதனால் அவர்கள் போலீசில் தகவல் சொல்லவே, விசாரணை நடந்தது. அப்போது ராமகிருஷ்ணாவை பிடிக்காததால் இதுபோல் செய்ததாக புஷ்பா கூறியதன் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்