காதலனை கொன்றவரை பழிவாங்க துடிக்கும் பெண் பாம்பு... சினிமாவை விஞ்சும் பயங்கரம்

தனது இணையை கொன்றவரை, மற்றொரு பாம்பு பழிவாங்கும் கதைகளை பழைய திரைப்படங்களில், பார்த்திருப்போம்.. ஆனால் உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது.
x
காதலனை கொன்றவரை பழிவாங்க துடிக்கும் பெண் பாம்பு... சினிமாவை விஞ்சும் பயங்கரம்

உத்தரபிரதேசத்தில், பாம்பு ஒன்று தனது ஜோடியை கொலை செய்த நபரை 7 முறை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது இணையை கொன்றவரை, மற்றொரு பாம்பு பழிவாங்கும் கதைகளை பழைய திரைப்படங்களில், பார்த்திருப்போம்.. ஆனால் உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்த எஸ்ஸான் அலி என்ற விவசாயி, தனது தோட்டத்தில் பாம்பு ஒன்றை அடித்து கொன்றுள்ளார். இந்நிலையில், 6 மாதங்களுக்கு பின் எஸ்ஸான் அலியை பாம்பு ஒன்று கடித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் தப்பியுள்ளார். அடுத்த சில நாட்கள் கழித்து, அதே பாம்பு மீண்டும் அவரை கடித்துள்ளது. இதிலும் அவர் மீண்டுள்ளார். இவ்வாறு அடுத்த‌டுத்து இதுவரை 7 முறை அந்த பாம்பு கடித்துள்ளதாகவும், அதன் ஜோடியை கொன்றதால் தன்னை பழிவாங்க துடிப்பதாக எஸ்ஸான் அலி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்