தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து .... தண்ணீர் தட்டுப்பாட்டால் அணைப்பதில் சிக்கல்

அரியானா மாநிலம் சோனிபட் அருகே குண்ட்லி பகுதியில் ரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
x
தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து .... தண்ணீர் தட்டுப்பாட்டால் அணைப்பதில் சிக்கல்

அரியானா மாநிலம் சோனிபட் அருகே குண்ட்லி பகுதியில் ரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். போதிய அளவு தண்ணீர் கிடைக்காத‌தால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஆலையில் பணியாளர்கள் யாரும் இல்லை என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், தீயை அணைத்த பிறகே விபத்துக்கான காரணங்கள் குறித்து தெரிய வரும் என்றனர். இந்த‌த் தீ விபத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ள்து.

Next Story

மேலும் செய்திகள்