"பணத்தை வைத்து அரசியல் செய்யும் நிலை"...யார் நேர்மையாக உள்ளனர்? - தேவகவுடா கேள்வி!

கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஊழல் புகார் எழுந்த நிலையில், அரசியலில் யார் நேர்மையாக உள்ளனர் என முன்னாள் பிரதமர் கேள்வி ?
x
"பணத்தை வைத்து அரசியல் செய்யும் நிலை"...யார் நேர்மையாக உள்ளனர்? - தேவகவுடா கேள்வி!

கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஊழல் புகார் எழுந்த நிலையில், அரசியலில் யார் நேர்மையாக உள்ளனர் என முன்னாள் பிரதமர் தேவ கவுடா கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் கேட்டதால் ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் சர்சையை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசியல் விவகாரம் குறித்து முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவ கவுடா விமர்சித்துள்ளார். அதில் தற்போது பணத்தை வைத்து அரசியல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால், யார் நேர்மையாக உள்ளனர் என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதலமைச்சராக இருந்த கர்நாடகாவிற்கு பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடி, ஊழல் கமிஷனை குறிப்பிடும் விதமாக மாநில அரசை 10 சதவீத அரசு என அழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்