கல்விக்கூடமாக மாறிய கங்கை... தொழிலதிபரை வியக்க வைத்த மாணவர்கள்!

பாட்னாவில் கங்கை படித்துறையில் கூடி அரசுப்பணி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
x
கல்விக்கூடமாக மாறிய கங்கை... தொழிலதிபரை வியக்க வைத்த மாணவர்கள்!

பாட்னாவில் கங்கை படித்துறையில் கூடி அரசுப்பணி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. பாட்னா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள கங்கை படித்துறையில், தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடி, அரசு பணியில் சேர்வதற்கான தேர்வுகளுக்கு தாயாராகி வருகின்றனர். குறிப்பாக ரயில்வே வாரிய தேர்வுகளுக்காக தயாராகும் இவர்கள், அதிகாலை முதலே கங்கை கரையில் அமர்ந்து படிக்க தொடங்கி விடுகின்றனர். இவ்வாறு படிக்கும் மாணவர்களை பாராட்டி தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடவே, இதுகுறித்து அறிந்த பலரும் மாணவர்களின் உழைப்பிற்கு தங்களது வாழ்த்தை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்