அரசு பேருந்தில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.1.9 கோடி பணம் - போலீசார் அதிர்ச்சி!

ஆந்திராவில் அரசு பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் வரையிலான பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
x
அரசு பேருந்தில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.1.9 கோடி பணம் - போலீசார் அதிர்ச்சி!

ஆந்திராவில் அரசு பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் வரையிலான பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஐதரபாத்தில் இருந்து ஆந்திராவின் காக்கிநாடாவுக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஜக்கய்யப்பேட்ட சோதனை சாவடியில் பேருந்தை நிறுத்திய போலீசார் பயணிகளை சோதனையிட்டனர். அதில் பயணிகள் வைத்திருந்த பெரிய பையில் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் இருப்பது தெரிய வந்தது. பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் எடுத்து சென்றது தொடர்பாக 7 பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்று கடந்த ஒன்றாம் தேதி கோதாவரி மாவட்டத்தில் தனியார் பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட நான்கரை கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்